3 - 4 பேருக்கு போதுமானது
தேவையான பொருட்கள் : -
- புழுங்கல் அரிசி - 1 சுண்டு
- தேங்காய் - பாதி
- பச்சை மிளகாய் - 15
- வெங்காயம் - 15
- கறிவேப்பிலை - 2 நெட்டு
- தண்ணீர் - 31/2 போத்தல்
- மஞ்சள் தூள் - 2
- தேசிப் பழம் - 2
- உப்பு - அளவிற்கு
செய்முறை :-
- தேங்காயை துருவி இரண்டு தம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பாலைப் பிழிந்து எடுத்துக் கொள்க .
- வெங்காயம் மிளகாயை துப்பரவாக்கி ஈர்க்கில் மாறி மாறி கோர்த்து வைத்துக் கொள்க
- பாத்திரத்தில் 3 போத்தல் தண்ணீரை விட்டு கொதிக்கவைத்து பின்பு அரிசியை கழுவிப் போட்டு அவியவிடவும் . அரிசி அரைப்பதமாக அவிந்தவுடன் , வெங்காயம் , மிளகாய் கோர்த்து வைத்துள்ள ஏற்க்கையும் கறிவேப்பிலை நெட்டையுமிட்டு மூடி அவிய விடவும் .
- அரிசி நன்றாக அவிந்ததும் , ஈர்க்கில் கோர்த்து வைத்துள்ள வெங்காயம் , மிளகாயை எடுத்து ஈர்க்கை நீவிவிட்டு பிறிதொரு பாத்திரத்தில் இட்டு நன்றாக மசித்துகொண்ட பின்பு அக்கலவையை அவிந்துகொண்டிருக்கும் அரிசியில் விட்டு தேங்காய் பால் அளவிற்கு உப்பு மஞ்சள் தூள் என்பவற்றையும் சேர்த்து நன்றாக துழாவி காய்ச்சி இறக்கி கறிவேப்பிலை நெட்டை நீக்கிய பின்பு , தேசிப்புளி விட்டுச் சேர்த்து சூட்டுடனேயே பரிமாறினால் அதிக சுவையாக இருக்கும் .
0 comments:
Post a Comment